மற்றுமொரு உணவுப் பொருளின் விலை அதிகரிப்பு
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் நெருக்கடி மற்றும் விலை
இந்த நாட்களில் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவுக்கும் மேல் உள்ளது.
அத்துடன் முட்டை ஒன்றின் 47.50 ரூபா என்ற போதிலும், சில இடங்களில் ஐம்பது ரூபாவுக்கும் அதற்கும் மேலதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில், எரிபொருள் நெருக்கடி, மூலப்பொருட்களுக்கான விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri