மற்றுமொரு உணவுப் பொருளின் விலை அதிகரிப்பு
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் நெருக்கடி மற்றும் விலை
இந்த நாட்களில் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவுக்கும் மேல் உள்ளது.
அத்துடன் முட்டை ஒன்றின் 47.50 ரூபா என்ற போதிலும், சில இடங்களில் ஐம்பது ரூபாவுக்கும் அதற்கும் மேலதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில், எரிபொருள் நெருக்கடி, மூலப்பொருட்களுக்கான விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் பாரியளவில் அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam