கதிர்காமம் விகாராதிபதியை 7 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி.
கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள வீடு ஒன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குச்(Mahinda Rajapaksa) சொந்தமானது எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலையாகியிருந்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரரிடம் இருந்து 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர நேற்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
