முக்கிய அமைச்சர்கள் மீது விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத்துறை
பத்து முன்னாள் மற்றும் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தகவல்களை மழுங்கடிப்பதற்காக மதுபான நிறுவனத்திடமிருந்து மில்லியன் கணக்கான ரூபாய் உட்பட பல்வேறு சலுகைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பிணைமுறி மோசடி
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பத்து பேரில் உள்ளடங்குவதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிணைமுறி மோசடியை கடுமையாக விமர்சித்தனர், ஆனால் மதுபான நிறுவனத்திடமிருந்து பணம் உட்பட பல்வேறு சலுகைகளைப் பெற்ற பிறகு, அவர்கள் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு மழுங்கடிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபான நிறுவனத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பல காசோலைகளைக் கண்டறிந்துள்ளது.
அந்த காசோலைகள் தொடர்பான விசாரணைகள் புதிய கோணத்தில் ஆரப்பித்துள்ளதாகத் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
