நிலக்கரி ஊழல் - களத்தில் சிஐடி! விசாரணை வளையத்துக்குள் 'லங்கா கோல்' நிறுவனம்
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை அதிரடியாக ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளரினால் நேற்று முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த விசேட விசாரணை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
விசேட பொலிஸ் பாதுகாப்பு
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, லங்கா கோல் தனியார் நிறுவனம் அமைந்துள்ள அலுவலகத்துக்கு நேற்று (11.04.2026) பிற்பகல் முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
முக்கிய ஆவணங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகின்றது.
இதேவேளை, குறித்த நிறுவனத்தின் அலுவலகம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பாரிய நிதி முறைகேடு
இருப்பினும், அலுவலகம் சீல் வைக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தல்கள் எவையும் வெளியாகவில்லை.
கடந்த 17 வருடங்களாக நிலக்கரி கொள்வனவு மற்றும் விநியோக நடவடிக்கைகளில் பாரிய நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் நேரடித் தலையீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam