ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து மாயமான பொருட்கள்! சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளன என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் பட்டியலை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலம்
சம்பவம் தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், விசாரணைகளின் முன்னேற்றம் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காதிலக உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
