ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து மாயமான பொருட்கள்! சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எந்தெந்த பொருட்கள் காணாமல் போயுள்ளன என்பதைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் பட்டியலை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலம்
சம்பவம் தொடர்பாக கொள்முதல் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், பொருட்களைப் பெற்றவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், விசாரணைகளின் முன்னேற்றம் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு கோட்டை நீதவான் நிலபுலி லங்காதிலக உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
