சர்ச்சையில் சிக்கிய ரணில் கையொப்பமிட்ட கடிதம்! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், ஜனாதிபதிக்கான கடிதத் தலைப்பில் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு விடுக்கப்படும் விசேட உத்தரவு என்ற தலைப்பில் ஒரு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் தென் மாகாணத்தில் மோசடி செயற்பாடுகளை மேற்கொள்ளும் வர்த்தகர் ஒருவருக்கு அவரது மோசடி நடவடிக்கைகளை முன் கொண்டு செல்ல இடையூறு விளைவிக்க வேண்டாம் என்றவாறான முறைகேடான உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவு
குறித்த கடிதத்தின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அனுப்பப்பட்டதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அது மாத்தறை தபால் அலுவலகத்தில் இருந்து தபால் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த கடிதம் போலியானதாக இருக்கலாம் என்ற ஊகத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

அதன் பிரகாரம் தற்போதைக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam