யாழ். பல்கலைக்கழக மாணவனிடம் சி.ஐ.டி 3 மணி நேர விசாரணை - செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுத்தபோது விடுதலைப்புலிகளின் பாடல் இசைக்கபட்டமை மற்றும் மாணவர் ஒன்றிய செயற்பாடுகள், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று திங்கட்கிழமை சுமார் 3 மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது. இ.தர்சன் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை ஒன்றில் ஊடகவியாளராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
