சி.ஐ.டி என்று பொது மக்களின் பணத்தை ஏமாற்றியவர் வவுனியா பொலிஸாரால் கைது
பொலிஸ் சி.ஐ.டி என தன்னை அறிமுகப்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நபரொருவர் குறித்த வீட்டில் உள்ள மகன் தொடர்பாக மகனின் தாயாரிடம் தெரியப்படுத்தி தன்னை சி.ஐ.டி என அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அவர்களுடன் பேசி மகனை வைத்து பணம் பெற்றுள்ளதுடன், பொலிஸில் இருந்து தனக்கு கிடைத்த யூரியா பசளை தருவதாகவும் கூறி பணம் பெற்றுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு
இந்நிலையில் பசளையும் வழங்காது தொலைபேசி அழைப்பை ஏற்க மறுத்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் பாதிக்கப்பட்டவர் தெரியப்படுத்தியிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பணம் பெற்ற குறித்த நபர் சி.ஐ.டி இல்லை என்பதை உறுதிப்படுத்தியதுடன் அவரை கைது செய்துள்ளனர்.
வவுனியா, இறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
