மலையகத்துக்கான புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்த சீனப்பெண் படுகாயம்
மலையகத்துக்கான புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்த சீனப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வருகை தந்திருந்த சீனாவைச் சேர்ந்த யெங் ஜீ (Yang Jie) எனும் சீனப் பெண்ணே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
சீனப்பெண் படுகாயம்
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த அவர், இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையம் அருகே சுரங்கமொன்றின் பக்கவாட்டில் மோதுண்டு தலைஅடிபட்டு நிலத்தில் வீழ்ந்துள்ளார்.
தலை மற்றும் பாதங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
அதனையடுத்து ஹப்புத்தளை பிரதேச மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், அங்கிருந்து தியத்தலாவைக்கும், நிலைமை பாரதூரமாக இருந்த காரணத்தினால் தற்போது பதுளை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சீன சுற்றுலாப் பயணியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 21 மணி நேரம் முன்

2 கதாநாயகன், 2 நாயகி வைத்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிக்கப்போவது இவர்தானா? Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு ஒரு சிறுவன் வந்து என்னிடம்... நடிகை சுஜாதா ஓபன் டாக் Cineulagam

இனியா விஷயத்தில் கோபி செய்த செயல், வீட்டைவிட்டு வெளியே போக சொல்லும் பாக்கியா... யூடியூப் டிரெண்டிங்கில் பாக்கியலட்சுமி புரொமோ Cineulagam
