இந்திய பொருளாதார மண்டலத்தை நோட்டமிடும் சீன ஆய்வுக் கப்பல்
சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பல் தற்போது இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தகவல்களுக்கு அமைய நேற்று(21.09.2023) முதல் சீன கப்பல் இந்தியாவிற்கு சொந்தமான நிக்கோபார் தீவுகளுக்கு அருகில், மிகக் குறைந்த வேகத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நேற்று காலை நுழைந்த Shi Yan 6 கப்பலை நிக்கோபார் தீவுகள் அருகே அவதானிக்க முடிந்தது என சர்வதேச கப்பற்றுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஆய்வு நடவடிக்கை
இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருந்த குறித்த கப்பல், நேற்று மாலை வங்காள விரிகுடாவை நோக்கி திரும்பிய நிலையில், நிக்கோபார் தீவுகளுக்கு உரிமம் கோருகின்ற இந்தியாவிற்கு சொந்தமான பிரத்தியேக பொருளாதார மண்டலத்தின் கடல் எல்லையை அண்மித்து தமது பயணத்தை மெதுவாக முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் புதிய பாதையை அவதானிக்கும்போது, Ninety East Ridge எனப்படும் கடலின் அடிவாரத்திலுள்ள மலைத்தொடரின் மேற்பரப்பில் பயணிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் இலங்கை வந்த,YUAN WANG 5 கப்பல் ஊடாகவும், Yen Hong எனும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலையும் பயன்படுத்தி குறித்த பகுதிகளில் சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்திவருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்தியாவும் அமெரிக்காவும் கடலுக்குள் உள்ள மலைகளைப் பற்றி பல ஆய்வுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
