இலங்கை வரும் சீன ஆய்வு கப்பலால் இந்தியா கவலையடைவது ஏன் - 10 காரணங்கள்

Hambantota Sri Lanka China India
By Murali Aug 04, 2022 10:36 PM GMT
Report

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறன் கொண்ட சீன ஆய்வு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள நிலையில், இது இந்தியாவில் பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையுடன் தொடங்கிய தைவான் கடற்கரையில் சீன இராணுவ ஒத்திகையுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரும்  சீன ஆய்வு கப்பலால் இந்தியா கவலையடைவது ஏன் - 10 காரணங்கள் | Chinese Research Vessel Arriving In Sri Lanka

தமது எச்சரிக்கையை மீறி மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, தைவான் அருகே மிகப்பெரிய இராணுவ ஒத்திகையின் ஒரு பகுதியாக சீனா 11 ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இந்நிலையில், இலங்கை வரும் ஆய்வு கப்பல் குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்தியாவின் கவலைக்கு  முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

01 யுவான் வாங் கிளாஸ் கப்பல் ஆகஸ்ட் 11 அல்லது 12ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்கும். 400 பணியாளர்களைக் கொண்ட இந்த கப்பலில் பாரிய கண்காணிப்பு ஆண்டெனா மற்றும் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

02 இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டால், ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை இந்தக் கப்பல் கண்காணிக்க முடியும்.

03 இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான வரம்பு குறித்த தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும்.

04 அணுசக்தி அல்லாத தளம் என்பதால் கப்பலை நிறுத்த அனுமதிப்பதாகவும், ஆனால் இந்தியாவின் கவலைகள் குறித்து அறிந்திருப்பதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்காக தமது கப்பலை அனுப்புவதாக சீனா அறிவித்தது என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.

05 கப்பலின் முன்னேற்றத்தை கண்காணித்து வருவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. "இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதை உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.

06 யுவான் வாங் கப்பல் மலாக்காவின் பரபரப்பான நீரிணையைத் தவிர்த்து இந்தோனேசிய ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைய வாய்ப்புள்ளது.

07 இந்த கப்பல் சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

08 1.4 பில்லியன் டொலர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிற்கு பெரும் தொகையை செலுத்த வேண்டிய இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேகிக்கின்றது.

09 கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதைகளில் அமைந்துள்ளஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு இலங்கை 2017 இல் சீனாவிற்கு வழங்கியது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

10 2014ம் ஆண்டில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டது, இது இந்திய கடற்படைக்கு பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இலங்கை துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல் பயணம் எதுவும் நடைபெறவில்லை.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US