கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன பிரஜை
கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன பிரஜை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறைமுக நகரத்துக்கும் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு மனிதவளத்தை வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளரான சீன பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துறைமுகத்துக்குள் பிரவேசிக்கும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனுமதிப்பத்திரம் இன்றி, குறித்த நபர்களை துறைமுகத்துக்குள் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது முக்கிய செய்திகளின் தொகுப்பு,