கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப் பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(31.3.2026) அதிகாலை சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொத்தலஹிம்புட்டு (Kothala Himbutu) தொகையை சட்டவிரோதமாக சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற சீனப் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
உலகப் புகழ்பெற்ற இலங்கைத் தேயிலை வர்த்தக முத்திரையிடப்பட்ட பொதிகளுக்குள், இந்த சீனப் பிரஜை 21 கிலோ கிராம் கொத்தலஹிம்புட்டுவை பொதி செய்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
46 வயதுடைய குறித்த சந்தேக நபர் இலங்கைக்குச் சுற்றுலா வந்த ஒரு சீனப் பிரஜை என தெரியவந்துள்ளது.

வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி, கொத்தலஹிம்புட்டு என்பது இலங்கையிலிருந்து வெளியே கொண்டு செல்ல முடியாத பாதுகாக்கப்பட்ட தாவர இனமாகும்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமைகள் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam