இலங்கை வந்தடைந்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்!
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
கோவிட் வைரஸ் பரவலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சிரேஷ்ட அதிகாரி இவர் ஆவார். இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபரில் சீனாவின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் யாங் ஜீச்சி நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கடந்த மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசி ஊடாக பேசியிருந்தார். தொற்றுநோய்க்கு பிந்தைய அபிவிருத்திக்கு ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையிலேயே, சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வெய் ஃபெங் (Wei Fenghe) இன் இலங்கை விஜயம் அண்மைய மாதங்களில் பிராந்தியத்திற்கான இரண்டாவது விஜயமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.




Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
