இலங்கை பொலிஸாருடன் சீன அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய கலந்துரையாடல்
உலகளாவிய இணைய நிதி மோசடியுடன் தொடர்புடைய சீன நாட்டவர்கள் பலர், அண்மையில் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பில் சீனா அரசாங்கம் இலங்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர் சூ யென்வெய் (Zhu Yanwei) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நேற்று(16) சந்தித்து அண்மைய கைதுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இணைய மோசடி
இதன்போது, சீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கணினிகளில் உள்ள சில உள்ளடக்கங்கள், மாண்டரின் மொழியில் உள்ளதால் அவற்றை மொழிபெயர்ப்பதற்கு சீனாவின் உதவி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு சீனத்தரப்பும் தமது உடன்பாட்டை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, கடந்த சில வாரங்களாக இலங்கையில் இணைய மோசடி தொடர்பாக ஏராளமான சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் தரப்பின் தகவல்களின் படி, இதுவரை 230 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri