இலங்கைக்கு குறுகிய பயணத்தை மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர்
சீன(China) வெளியுறவு அமைச்சர் வாங் யி(Wang Yi) நேற்று ஞாயிற்றுக்கிழமை நமீபியாவுக்குச் செல்லும் வழியில் இலங்கையில் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை(Sri lanka) நேரப்படி 02.18 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்ததாக விமான நிலைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
குறுகிய பயணம்
இதன்போது,18 உறுப்பினர்களைக் கொண்ட சீனக் குழுவை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங், ஓய்வுபெற்ற விமானத் தலைவர் மார்சல் ஹர்சா அபேவிக்ரம ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
இந்தநிலையில், சீன வெளியுறவு அமைச்சரும் அவரது குழுவும் இலங்கை நேரப்படி 04.23 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனவரி 5 முதல் 11 வரை நமீபியா, கொங்கோ குடியரசு, சாட் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு வாங் யி விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
