இலங்கைக்கு குறுகிய பயணத்தை மேற்கொண்ட சீன வெளியுறவு அமைச்சர்
சீன(China) வெளியுறவு அமைச்சர் வாங் யி(Wang Yi) நேற்று ஞாயிற்றுக்கிழமை நமீபியாவுக்குச் செல்லும் வழியில் இலங்கையில் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை(Sri lanka) நேரப்படி 02.18 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்ததாக விமான நிலைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
குறுகிய பயணம்
இதன்போது,18 உறுப்பினர்களைக் கொண்ட சீனக் குழுவை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹாங், ஓய்வுபெற்ற விமானத் தலைவர் மார்சல் ஹர்சா அபேவிக்ரம ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

இந்தநிலையில், சீன வெளியுறவு அமைச்சரும் அவரது குழுவும் இலங்கை நேரப்படி 04.23 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஜனவரி 5 முதல் 11 வரை நமீபியா, கொங்கோ குடியரசு, சாட் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு வாங் யி விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri