இலங்கைக்குள் டொலரை மிஞ்சிய சீனாவின் யுவான்! 21ஆம் நூற்றாண்டில் பெரும் நெருக்கடி
இலங்கையை ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து மீட்டு, தனது மேலாதிக்கத்திற்கு உட்பட தீவாக மாற்றுவதே சீனாவின் நோக்கம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் செலுத்த வேண்டிய கடனை டொலர்களில் செலுத்த வேண்டியுள்ளது.
எனினும் இம்முறை சீனா வழங்கும் கடன் உதவியானது டொலர்களில் அல்லாது தன்நாட்டு நாணயமான யுவான் மூலம் வழங்குகிறது. டொலர் மேலாதிக்கத்தை வீழ்த்தி விட்டு, யுவான் மேலாதிக்கத்தை கட்டியெழுப்புவது சீன மூலதனத்தின் குறுகிய நோக்கமாக உள்ளது.
இலங்கையை அடகுக்கு எடுத்துள்ள சீனாவே தற்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையின் இறையாண்மை ஆதரவாக அதிகளவில் குரல் கொடுத்து வருகிறது.
இலங்கையை ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து மீட்டு, தனது மேலாதிக்கத்திற்கு உட்பட தீவாக இலங்கையை மாற்றுவதே சீனாவின் நோக்கம். ஐரோப்பிய இனத்தவர்கள் இலங்கையர்களுக்கு கெடுதிகளை செய்திருந்தாலும் அவர்களிடம் இருந்து பல நன்மைகள் கிடைத்துள்ளன.
முதலாளித்து நாடாளுமன்ற ஜனநாயகம், தொழிலாளர் உரிமை, கல்வி உட்பட பல விடயங்கள் அவற்றில் அடங்கும். எனினும் இலங்கை எதிர்காலத்தின் சீனா அடிமை காலனியாக மாறினால், இவை எதுவும் இருக்காது. சீனாவுக்கு சீனாவின் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற சுரங்கங்களில் சிக்கியுள்ளனர்.
ஜனநாயக விரோத சீன ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்புவோர் தொகை தொகையாக பட்டப்பகலில் கொலை செய்யப்படுகின்றனர்.
உலகில் அனைத்து இடங்களிலும் இருக்கும் சமூக வலைத்தளங்களின் ஊடாக பொது மக்களின் குரல் சீனாவில் மாத்திரம் தடை செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை என்பது சீனாவுக்கு தடை செய்யப்பட்ட வார்த்தை. சுருக்கமாக கூறினால், சீனாவில் உள்ள சமூகம் 21ஆம் நூற்றாண்டில் தொழில் அடிமை சமூகம். போலியான கம்யூனிச கொடியின் மூலம் சீனா தனது மோசமான குரூரத்தை மறைத்து வருகிறது.
எதிர்காலத்தில் இலங்கையின் தலையெழுத்தும் 21ஆம் நூற்றாண்டின் ஆசியாவின் அடிமை பேரரசின் கீழ் இருக்கும் அடிமை காலனித்துவ நாடு என்ற நிலைமைக்கு சென்று, பானையில் இருந்து அடுப்பில் விழும் சூழல் ஏற்படும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
