சீனாவில் ஆபத்தாக மாறும் வைரஸ் தொற்று - இலங்கை சுகாதார பிரிவின் அறிவிப்பு
சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் குறித்து இலங்கை சுகாதார பிரிவினர் கவனம் செலுத்தி வருவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னர், சீனா ஒரு புதிய வைரஸ் பரவி வருகிறது.
கோவிட் அறிகுறிகள்
HMPV எனப்படும் இந்த வைரஸுக்கும் கோவிட் அறிகுறிகள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது, மேலும் சில மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதார பிரிவை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam