கடன் நிவாரண ஒப்பந்தத்தில் இலங்கைக்கு உதவிய சீனா: IMF தலைவர் தெரிவிப்பு!
இலங்கைக்கான கடன் நிவாரண ஒப்பந்தத்தை எட்டுவதற்குச் சீனா உதவியதாகச் சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுக்கான கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை அடையச் சீனா தனது பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று சீனாவின் புதிய உயர்மட்ட பொருளாதார அதிகாரி லி கியாங்கிடம் ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார்.

தாமதங்கள் ஏற்படுகின்றன
மெரிடியன் ஹவுஸ் மற்றும் பொலிட்டிகோ நடத்திய ஒரு நிகழ்வில், உரையாற்றிய ஜோர்ஜீவா, கடன்களைக் கையாள்வதற்குச் சீனா பல நிறுவனங்களைக் கொண்டுள்ளமையால், தாமதங்கள் ஏற்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சீனா தமது பங்கேற்பை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளதாக
ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri