அதிக விலைக்கு தடுப்பூசியை வழங்கிய சீனா- இலங்கை மறுப்பு
சினோபார்ம் தடுப்பூசியை பங்களாதேஷுக்கு வழங்கிய விலையை விட சீனா, இலங்கைக்கு அதிக விலைக்கு வழங்கியதாக வெளியான தகவலை இலங்கை மறுத்துள்ளது.
பங்களாதேஷுக்கு குப்பி ஒன்றை 10 டொலருக்கு சீனா வழங்கியுள்ளது.இலங்கைக்கு அது 15 டொலர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இதற்குப் பதிலளித்த மருந்துகள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன் ஜெயசுன, பங்களாதேஷுக்கு 10டொலருக்கு தடுப்பூசி வழங்கப்படவில்லை. அது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷுன் கோவிட் கொள்முதல் உடன்படிக்கை இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசிகளில், 20 மில்லியன் குப்பிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கை ஒரு குப்பி எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை 5.50 டொலருக்கு கொள்வனவு செய்தது.
இந்தநிலையில் ,சினோஃபார்ம் தடுப்பூசிகளைக் குறைந்தபட்ச விலையிலேயே பெற்றுள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசெல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனைக்காட்டிலும் சர்வதேசத்தில் தடுப்பூசிகள் 18டொலர் முதல் 40 டொலர்
வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.