சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டம்-சுயாட்சியை அர்ப்பணிக்கும் மட்டத்தில் இலங்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Pakistan China Africa
By Steephen Jan 30, 2023 06:50 AM GMT
Report

சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டத்தின் (One Belt One Road) முயற்சிகள் காரணமாக அதன் பங்காளி நாடுகளுக்கு எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக South-South reserch initiative என்ற ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

செம்பியா, பாகிஸ்தான் லாவோஸ், அங்கோலா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் பின்னர் ஆய்வு நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நீண்டகால பிரதிபலன்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படவில்லை 

சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டம்-சுயாட்சியை அர்ப்பணிக்கும் மட்டத்தில் இலங்கை | China S Silk Road Project Sri Lanka

சீனாவின் ஒரு பட்டை -ஒரு வழி (One Belt One Road) திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்கள், அதனால் கிடைக்கும் நீண்டகால பிரதிபலன்களை பற்றி போதுமான அளவில் கவனத்தில் கொள்ளாது மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள்.

இந்த திட்டங்களில் பல திட்டங்கள் பெரும்பாலும் அரசாங்கம் மற்றும் கொள்கைகளில் சார்ந்துள்ளன.

சீனாவின் செலவுகளில் பெருந்தொகையான பங்கை தாம் ஈடு செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலேயே சில நாடுகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க தயங்கியுள்ளன.

சிவில் சமூகம் மற்றும் பிரதேச மக்களின் பிரச்சினைகளை போதுமான அளவு கவனத்தில் கொள்ளாது அரச நிறுவனங்களுடன் தொடர்புக்கொள்வதிலேயே சீன கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது.

செம்பியா, பாகிஸ்தான், அங்கோலா, லாவோஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் சீன சம்பந்தப்பட்டமையின் மூலம் இதனை தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.

செம்பியாவின் கைத்தொழில் துறையை அழிக்கும் சீன முதலீட்டாளர்கள்

சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டம்-சுயாட்சியை அர்ப்பணிக்கும் மட்டத்தில் இலங்கை | China S Silk Road Project Sri Lanka

கடந்த 2013 ஆம் ஆண்டு சீனா நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பட்டு வழிப்பாதை திட்டத்தின் முயற்சி காரணமாக அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.

செம்பியாவில் சீனா செய்துள்ள முதலீடுகளால் செம்பிய அரசுக்கு பிரதிபலன்கள் கிடைக்கும் எவ்வித வழிகளும் உருவாக்கப்படவில்லை.

இதற்கு பதிலாக சீன முதலீட்டாளர்கள் செம்பியாவின் கைத்தொழில் துறையை அழிக்கும் விதத்தை அந்நாட்டு அரசு கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பலருக்கு சீனாவின் மிகப் பெரிய மீன்பிடி படகுகளுடன் போட்டிப் போட முடியாத காரணத்தினால், அவர்கள் பீதிக்கு உள்ளாகி இருப்பது யதார்த்தமாகி மாறியுள்ளது.

சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அந்நாட்டில் சமூக பதற்றம் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

லாவோஸ் சீனாவின் கடனாளி நாடாக மாறியுள்ளதால், அதன் ஊடாக லாவோஸின் கொள்கை திட்டமிடல் நடவடிக்கைகளிலும் சீனா தனது பலத்தை பயன்படுத்தும் நிலைமை உருவாகியுள்ளது.

சீனாவின் அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நாடுகளிலும் அந்த முதலீடுகளின் பிரதிபலன்கள் மூலம் பிரயோசனத்தை பெற முடியாத காரணத்தினால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது.

சுய நிர்வாகத்தை அர்ப்பணிக்கும் மட்டத்திற்கு சென்றுள்ள இலங்கை 

சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டம்-சுயாட்சியை அர்ப்பணிக்கும் மட்டத்தில் இலங்கை | China S Silk Road Project Sri Lanka

அதேவேளை இலங்கை, முக்கியமாக கொழும்பு சர்வதேச நிதி நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக விரிவாக்கம், மத்தள விமான நிலையம் மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் போன்ற ஏனைய உட்கட்டமைப்பு வளர்ச்சித்திடடங்களை South-South reserch initiative  ஆய்வு நிறுவனம் விரிவாக ஆராய்ந்துள்ளது.

இப்படியான திட்டங்களின் பிரதிபலனாக இந்த திட்டங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை  எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பிலான சிக்கலில் இலங்கை ஓரளவிலான தனது சுயாட்சியை அர்ப்பணிக்கும் மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டத்தின் முதலீடுகளில் குறிப்பிடத்தக்க பங்கு சீன அரச நிறுவனங்களிடம் இருந்து கிடைப்பதால், இலங்கையில் அதிகரித்து வரும் கடன் சுமை மற்றும் இறையாண்மை இழப்பு தொடர்பில் கவலைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீனாவின் பட்டு வழிப்பாதை திட்டங்களில் வெளிப்படை தன்மை இல்லாததை காணக்கூடியதாக இருப்பதுடன் ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் South-South reserch initiative என்ற ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US