யாழில் சீனாவின் ஆதிக்கமா? நடந்தது என்ன?
யாழ். வடமராட்சி பகுதியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி வத்திரியானில் தனி நபர் ஒருவரது சொந்தக் காணியில் சிறார்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மைதானத்தின் முன் பகுதியில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு சீனர்களின் தேசிய கொடியில் உள்ள ட்ரகன் சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அப்பகுதி பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.