இலங்கையில் சீனாவின் செயற்பாடு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையலாம்
இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என இந்திய கடற்படை உயர் அதிகாரிகளில் ஒருவரான வைஸ் அத்மிரல் ஜீ. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
சீனா, இலங்கையில் புதிய துறைமுக நகர திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளமை தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் காரணமாக பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
எவ்வாறாயினும் கடல் எல்லைகளை பாதுகாக்க இந்திய கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதால், எந்த தரப்புக்கும் தலையீடுகளை செய்ய முடியாது எனவும் அசோக்குமார் குறிப்பிட்டுள்ளார்.