தீர்வுப் பேச்சுக்கு வாழ்த்துக் கூறக் கூட சீனா மறுப்பு
நாம் இந்தியாவின் கலாசாரத்தை ஒத்தவர்கள் என்பதால் அதனை நாம் நாடி நிற்பது குறித்து சீனா அஞ்ச வேண்டிய தேவை கிடையாது என இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவரிடம் யாழ்ப்பாண பிரமுகர் ஒருவர் எடுத்துரைத்துள்ளார்.
இதற்கு இந்திய, இலங்கை தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவைத் தாங்கள் புரிந்துகொள்வதாக சீனப் பிரதித் தூதுவர் பதிலளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று(28.12.2022) வந்த சீனாவின் பிரதித் தூதுவர் தலைமையிலானகுழுவினரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறுவர் சந்தித்துள்ளனர்.
இறுதிப் போர்
இதேநேரம் போரின் போது பாதிக்கப்பட்ட தரப்புடன் அன்றி, பாதிப்பை ஏற்படுத்திய தரப்புடனேயே சீனா நின்றமை வருத்தமளிக்கின்றது என யாழ். பிரமுகர்கள் தரப்பில் எடுத்துரைத்துள்ளனர்.
மேலும் தெரிவிக்கையில்,
இறுதிப் போரின்போது சீனா மட்டுமல்ல, இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு உதவியமையும் எமக்குத் தெரியும்.
ஆனால், மற்ற நாடுகள் தற்போதேனும் தங்களை மாற்றிக்கொண்டாலும் சீனா இன்று வரை அதனை மாற்றவோ அல்லது பாதிப்புற்றோர் தரப்பைப் பரிவுடன் அணுகவோ தயார் இல்லை.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை
இதேநேரம் எமக்காகக் குரல் கொடுக்க முடியாது, நாம் அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்கின்ற ரீதியில்தான் செயற்பட முடியும் எனச் சீனா கருதினால், தற்போது இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் ஒரு பேச்சுவார்த்தை ஏற்பாடு இடம்பெறுகின்றது.
அந்தப் பேச்சுவார்த்தை
வெற்றியளிக்க வேண்டும் என்று ஒரு வாழ்த்து அறிக்கையையாவது சீனாவால் வெளியிட
முடியுமா என்று யாழ். பிரமுகர்களால் கேட்ட போதும் சீன அதிகாரிகள் அதற்கும்
மறுத்துவிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.