இலங்கைக்குள் நுழையும் எலிசபெத்! காத்திருக்கும் அதிரடி நகர்வுகள்
பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் எலிசபெத் மிகுந்த கவனம் செலுத்துவார் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆருஸ் தெரிவித்துள்ளார்.
இந்து பசுபிக் பிராந்திய வலயத்துக்குள் சீனாவின் நகர்வானது இந்தியாவை இலக்காக கொண்டு இருப்பது தொடர்பாக லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தியா(India) - சீனா போட்டிக்குள் அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கமளித்தார்.
மேலும், '' இலங்கையில் சீனா வலுவாக கால் பதித்துவிட்டார்கள். இதனால் இலங்கையில் இருந்து அவர்களை அசைப்பதென்பது மிகவும் கடினமான விடயமாகும்.
அத்தோடு அவர்களின் பார்வை ஐரோப்பா, தென்னமெரிக்க, ஆப்பிரிக்காவின் பக்கம் திரும்பியுள்ளது.'' என்றார்.
இவ்வாறு இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் சீனாவின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பிலும், இந்து பசுபிக் வலயத்தில் சீனாவின் நகர்வுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு…
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
