இந்தியாவின் அறிவிப்புக்கு மத்தியில் சீன அமைச்சரின் இலங்கை பயணம்!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.
இன்று மாலை 6.30 அளவில் அவர் இலங்கையை வந்தடைவார் என்று எமது கட்டுநாயக்க செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் சீன- இலங்கை ராஜதந்திர உறவின் 65 வது நிறைவுகான் நிகழ்வை ஆரம்பித்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் உள்ள சீனத் துாதரகத்தின் தகவல்படி, சீன வெளியுறவு அமைச்சரின் புதுவருடத்துக்கான முதலாவது வெளிநாட்டு பயணமாக இது அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தளம்பல் நிலையில் இருக்கும்போது, சீன அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதன்போது இலங்கைக்கான நிவாரணத்திட்டங்களை அவர் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இலங்கை நெருக்கடியான நிலையில் இருக்கும்போது இந்தியா, அதற்கு உதவும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரெண்டிங் 'முட்ட கலக்கி' பாடலுக்கு நடனமாடிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள்.. வீடியோ இதோ Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri