சீனா - இந்தியா இடையில் இலங்கையின் உடனடி இராஜதந்திர தலையீடுகள் அவசியம் - முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி

Hambantota Sri Lanka China Ship In Sri Lanka Dayan Jayatilleka
By Independent Writer Aug 12, 2022 10:41 AM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் யுவான் வேங் - 5 ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணம் தொடர்பில், உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர தலையீடுகள் செய்யப்பட வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க  [Dayan தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் வெளிவிவகார அமைச்சர் ஊடாகவோ அல்லது ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஒருவர் ஊடாகவோ அல்லது பிரதமரின் தலையீடாகவோ இருக்க வேண்டும் குறித்த விசேட பிரதிநிதி, உடனடியாக சீனாவுக்கும், இந்தியாவுக்கும் சென்று, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடை நிலைத் தீர்வுக்கு வருவது அவசியமானதாகும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

சீனாவை கோபப்படுத்திக் கொண்டால், கடன் மறுசீரமைப்பு அல்லது வேறு கடனைப் பெற்றுக்கொள்வதில் பாரிய பிரச்சினை ஏற்படும். அதேநேரம், இந்தியாவை கோபப்படுத்திக்கொண்டால், அங்கும் பாரிய பிரச்சினை ஏற்படும், எமக்கு அவசியமான சந்தர்ப்பத்தில், இந்தியா இவ்வாறாக நட்புறவை வெளிப்படுத்தும் நிலையில், இந்தியாவுக்கு பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடிய சீனாவின் கப்பலுக்கு இடமளிப்பதாயின், அதனூடாக தாமாகவே குழியை வெட்டிக்கொண்டு, அதற்குள் இந்த அரசாங்கம் வீழ்ந்துள்ளது.

சீனா - இந்தியா இடையில் இலங்கையின் உடனடி இராஜதந்திர தலையீடுகள் அவசியம் - முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி | China India Diplomatic Interventions Are Necessary

இவ்வாறான சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் ஆசனத்தில் யார் அமர்வது என்பது குறித்து ஆராயாமல், நாட்டின் இராஜதந்திர உறவு குறித்து பரந்தளவில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

இந்த சீனக் கப்பல், விமானத்தில் கொண்டுவந்து இறக்கப்படும் ஒன்றல்ல. இது அவசரமாக இடம்பெற்ற ஒன்றல்ல. இந்தக் கப்பலை அனுப்புவது குறித்து, சீனா விடுத்த கோரிக்கைக்கு, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்தது. இது, எந்த வகையிலான கப்பல் என்பதை வெளிவிவகார அமைச்சு அறிந்திருக்கவில்லையா? குறித்த கப்பலில் அதிநவீன இலத்திரனியல் கட்டமைப்பு உள்ளது.

இந்தியா இதனை எவ்வாறு நோக்கும். இந்தக் கப்பல், பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல் அல்ல. 2015 இல் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தொடர்பில் இதுபோன்ற பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. எனவே, இது போன்ற ஒன்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து முதலில் விசாரணை நடத்தி, அந்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

'யுவான் வாங்-5 என்ற சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆய்வுக் கப்பல், நேற்று முற்பகல் 9.30 அளவில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அடைய உள்ளதாக இந்திய ஊடகமொன்று நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.

பாதுகாப்பு காரணிகளை சுட்டிக்காட்டிய இந்தியாவின் கடும் அதிருப்தியின் காரணமாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைத்திருந்த செய்திக் குறிப்பில், மேலும் ஆலோசனை செய்யப்படும் வரை யுவான் வாங் -5 கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான தொடர்பு சுதந்திரமானதே தவிர, மூன்றாம் தரப்பினரை இலக்கு வைத்தது அல்ல என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், குறித்த கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசிக்க கோரிக்கை விடுக்கப்பட்டால், இராஜதந்திர ரீதியில், அதற்கமைவான பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஹம்பாந்தோட்டை துறைமுக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

சீனா - இந்தியா இடையில் இலங்கையின் உடனடி இராஜதந்திர தலையீடுகள் அவசியம் - முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரி | China India Diplomatic Interventions Are Necessary

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US