இலங்கைக்கு அறிவுரை வழங்கியுள்ள சீனா
விஞ்ஞானத்திற்கு மதிப்பளிக்குமாறு இலங்கைக்கு, சீனத்தூதரகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இயற்கை பசளை இறக்குமதி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை குறித்து இவ்வாறு சீனத் தூதரகம் கருத்து வெளியிட்டுள்ளது.
சீன நிறுவனமொன்றிடமிருந்து இயற்கை பசளை கொள்வனவு செய்ய முன்னதாக அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், இந்த உர மாதிரிகளில் ஆபத்தான பக்ரீரியா காணப்படுவதாக இதனால் குறித்த சீன நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்யப்படாது எனவும் விவசாய அமைச்சு அறிவித்திருந்தது.
இலங்கை ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் விஞ்ஞானபூர்வமானவை கிடையாது என சீன தூதரகம் விமர்சனம் செய்துள்ளது.
விவசாய அமைச்சின் இந்த தீர்மானம் காரணமாக சீன நிறுவனத்திற்கு பெரும் நிதி நட்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.