இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா உறுதி!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கான தங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், வாங் வென்பின் (Wang Wenbin) தமது வழமையான வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் (13.04.2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின்போதே அவர் இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
மேலும், கடன் மறுசீரமைப்பைத் தீவிரமாகச் செயல்படுத்துவதில் சீன நிதி நிறுவனங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இணைந்து பணியாற்றும்
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான கடன் வழங்குநர்களான, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள 'புதிய தளம்' தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வென்பின், 'சீனா தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், நியாயமான சுமை பகிர்வின் அடிப்படையில் இலங்கையின் கடன்
மறுசீரமைப்பில் பங்கு கொள்ளுமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களைச்
சீனா அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam