இலங்கையை பழி வாங்கும் சீனா
சீனா, இலங்கையில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த இரட்டை மின் உற்பத்தி முறைமை சம்பந்தமான மூன்று திட்டங்களை நிறுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் Sino Soar Hybrid Techology என்ற நிறுவனத்தினால், வடக்கில் மூன்று தீவுகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தாக சீனத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாம் தரப்பு ஒன்றில் ஏற்படக் கூடிய பாதுகாப்பு காரணத்தின் அடிப்படையில், அந்த திட்டங்களை மாலைதீவில் உள்ள 12 தீவுகளில் மேற்கொள்ள உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதனப் பசளை அடங்கிய கப்பல் தொடர்பில் இலங்கையில் உருவான கடும் மக்களின் எதிர்ப்பு காரணமாக, அதற்கு பணத்தை செலுத்துவதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.
இதற்கு சீன அரசு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இதனிடையே அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam