ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் போராடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
குறைந்தது ஆறு வருடங்களில் முதன்முறையாக 2022இல் இலங்கையில் பல்வேறு வகையான ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் போராடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க அறிக்கை மற்றும் சுகாதார அமைச்சின் தரவு சுட்டிக்காட்டியுள்ளது.
22 மில்லியன் மக்களைக் கொண்ட தீவு தேசம், 1948 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, மோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக, உணவு உட்பட உயர்ந்து வரும் விலைகளுடன் போராடி வருகிறது என்று ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43.4 வீதத்துக்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் போராடும் குழந்தைகள்
42.9 வீதமானோர் ஏதாவது ஒரு வகையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்த பின்னர், 2022 ஆம் ஆண்டில் குறைந்த எடை, வளர்ச்சி குன்றிய அல்லது எடை குறைந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சதவீதம் அதிகரித்துள்ளன.
ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 1.4 மில்லியன் குழந்தைகள் நாட்டின் பொது சுகாதார மருத்துவச்சிகள் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021இல் 12.2வீதமாக இருந்த எடைக்குறைந்த குழந்தைகளின் வீதம் 2022 இல் 15.3 வீதமாக உயர்ந்திருந்தது.
வளர்ச்சிக்குன்றிய குழந்தைகளின் வீதம் 2021இல் 9.2ஆக இருந்த நிலையில் 2022இல்
அது, 10.1 வீதமாக உயர்ந்திருந்தது நாட்டின் இந்த தீவிரப் போக்கு நகர்ப்புறம், கிராமம் மற்றும்
பெருந்தோட்டத்துறையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தரவு
சுட்டிக்காட்டியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
