மதில் விழுந்து குழந்தை பலியான சோகம்: முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவில் இரண்டரை அடி உயரமான மதில் விழுந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
பூநகரியைச் சேர்ந்த இமானுவேல் தர்சன் சாதுசன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
முல்லைத்தீவு, சிலாவத்தையிலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு குடும்பத்தினர் நேற்று முன்தினம் (02.07.2023) சென்றுள்ளனர்.
தூண் போடப்படாத பழைய மதில் அருகில் குழந்தை தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.
மதில் சரிந்து குழந்தை மீது வீழ்ந்துள்ளது
அதன் மறுபக்கத்தில் நின்றிருந்த உறவினர் ஒருவர் குழந்தையை மதில் மேலாகத் தூக்குவதற்காக, மதிலில் ஒரு காலை ஊன்றியுள்ளார்.
அப்போது மதில் சரிந்து குழந்தை மீது வீழ்ந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
