மதில் விழுந்து குழந்தை பலியான சோகம்: முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவில் இரண்டரை அடி உயரமான மதில் விழுந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
பூநகரியைச் சேர்ந்த இமானுவேல் தர்சன் சாதுசன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
முல்லைத்தீவு, சிலாவத்தையிலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு குடும்பத்தினர் நேற்று முன்தினம் (02.07.2023) சென்றுள்ளனர்.
தூண் போடப்படாத பழைய மதில் அருகில் குழந்தை தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.
மதில் சரிந்து குழந்தை மீது வீழ்ந்துள்ளது
அதன் மறுபக்கத்தில் நின்றிருந்த உறவினர் ஒருவர் குழந்தையை மதில் மேலாகத் தூக்குவதற்காக, மதிலில் ஒரு காலை ஊன்றியுள்ளார்.
அப்போது மதில் சரிந்து குழந்தை மீது வீழ்ந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
