யாழில் பதின்ம வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் 14 வயதுச் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்-குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைக்கு அடிமையாகிய இளைஞர்கள்
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே சிறுமியை தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தபோதே சந்தேகநபர்கள் இந்த செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேகநபர்கள் மருத்துவ பரிசோதனைக்காக
யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில்
முற்படுத்தப்பட்டுள்ளனர்.
