சிறுமி துஷ்பிரயோகம்: குடும்பஸ்தர் கைது
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோதரியின் கணவர் தலைமறைவான நிலையில் சிறுமியின் தாயார் மற்றும் சகோதரி உட்பட இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த S.S.S.Samantha தெரிவித்துள்ளார்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுமி தாய் மற்றும் திருமணம் முடித்த சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சகோதரியின் கணவன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பணியாகியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் சகோதரியின் கணவர் தலைமறைவாகியதையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து தலைமறைவாகிய நபரை பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயதுடைய தாயார் மற்றும் சிறுமியின் 24 வயதுடைய சகோதரி ஆகிய இருவரையும் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.
சமந்த தெரிவித்துள்ளார்.
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan