பெற்றோருக்கு பல சந்தர்ப்பங்களில் தூக்க மாத்திரை! சிறுமிக்கு நேர்ந்த அவலம்
15 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சந்தேகநபர் ஒருவரை அத்துருகிரிய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இரண்டு ஆண்டுகளாக ஆபாச காணொளிகளை காண்பித்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, சிறுமி சந்தேகத்திற்கிடமான மாத்திரையை எடுத்துக் கொண்டார், இதனை அவதானித்த தந்தை, அது குறித்து விசாரித்துள்ளார்.
அது கருத்தடைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மாத்திரை என தெரியவந்தது. இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் பெற்றோருக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு வந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சிறுமி வைத்திய பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri