பிரித்தானியாவில் முதல் முறையாக தமிழர்களுக்காக நடைபெற்ற சதுரங்க போட்டி(Photos)
பிரித்தானியாவில் பிரமாண்டமாக நடைபெற்ற சதுரங்கப் போட்டி பிரித்தானியாவிலே முதல் முறையாக தமிழர்களுக்கான சதுரங்க போட்டி Alperton Community பாடசாலை மண்டபத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.05.2023) பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.
போட்டியின் ஆரம்ப விழாவில், Mayor of Brent Councillor Orleen Hylton பிரதம விருந்தினராகவும், கவுன்சிலர் ராஜன் சீலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளனர்.
முதல் முறையாக நடைபெற்ற சதுரங்க போட்டி
தமிழ் மரபுப்படி விருந்தினர்கள் மங்கல விளக்கு ஏற்றியுள்ளனர். அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டிக்கு 8 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 100க்கு மேலானோர் விண்ணப்பத்திருந்தது குறிப்பிடத்தக்கது.