யாழ். சென்னை விமான சேவையில் தடங்கல்: வானில் 30 நிமிடங்கள் பறந்த விமானம்
சென்னையில் இருந்து யாழ். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய இருந்த விமானம் மீண்டும் சென்னை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக இன்று (19.12.2023) விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது.
குறித்த தகவலை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீரற்ற வானிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று (19) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பியுள்ளது.

குறித்த விமானம் இன்று 11.40 ற்கு தரையிறக்க வேண்டிய நிலையில் சீரற்ற வானிலை காரணமாக வானில் 30 நிமிடங்களுக்கு மேலாக பறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சென்னைக்கு திரும்பி சென்றதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You may like this
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam