மன்னாரில் ட்ரோன் மூலம் இரசாயனம் விசிறும் நடவடிக்கை
மன்னாரில் (Mannar) நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு இரசாயனம் விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது இன்று (26.04.2024) நடைபெற்றுள்ளது.
பயறுச் செய்கை
இதன் போது பயறுச் செய்கைக்கான இரசாயனம் விசிறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதிப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கமநல விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - மன்னார் நிருபர் அ.ராஜுகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |