அனுர பிரியதர்ஷனவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை
முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2014.12.26 முதல் 2015 ஜனவரி வரை வெள்ள நிவாரணத்திற்கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று குற்றபத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
பிணை அனுமதி
குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்ட பின்னர், அதனை பரிசீலித்த நீதிபதி அவர்களை பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

மேலும், அவர்களின் கைரேகைகளை எடுக்கவும், முந்தைய குற்றப் பதிவுகளை விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கின் முழு விசாரணையும் ஒக்டோபர் 1 ஆம் திகதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri