சனல் 4 காணொளியை நிராகரிக்க முடியாது : மைத்திரி அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிழல் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை நூற்றுக்கு நூறு உண்மை என்று கூறிவிட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் குறிப்பிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
விசாரணைகள் வெற்றியடையவில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரித்தானியாவின் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை முற்று முழுவதுமாக எம்மால் நிராகரித்துவிட முடியாது. இருப்பினும் இந்த காணொளியை நூற்றுக்கு நூறு வீதம் உண்மை என கூறவும் முடியாது.
எனினும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீனமான, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே சிறந்தது.
விசாரணை நடத்துமாறும், உண்மையை வெளிக்கொண்டுவருமாறும் இங்குள்ளவர்களுக்கு கூறினாலும் அது சரிவராது. மேலும் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை. இதனை என்னால் அடித்துக் கூற முடியும். விசாரணைகள் வெற்றியடையவில்லை.
தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் சனல் 4 காணொளி தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு கூறியுள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் சபை கூறுவது போன்று சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டால் சிறந்தது என நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 காணொளி தொடர்பில் சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இலங்கை இராணுவம்! பகிரங்க குற்றச்சாட்டு (video)

கோட்டாபயவின் வெற்றிக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகள் உயிர் தியாகம் செய்வார்களா... சரத் வீரசேகர எழுப்பும் கேள்வி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
