சிங்கள அரச தலைவரை உருவாக்க 9 முஸ்லிம்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா..! நாடாளுமன்றத்தில் கேள்வி

Sri Lanka Bomb Blast 2019 Sri Lanka Easter bombings Gotabaya Rajapaksa Mahinda Amaraweera Easter Attack Sri Lanka
By Benat Sep 05, 2023 06:33 PM GMT
Report

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை தோற்றுவிக்க 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுத்தாரிகளாக மாறுவார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்றைய சபை அமர்வின்  போது கேள்வி எழுப்பினார்.   

வெள்ளைக் கொடி ஏந்தி வந்த அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என குறிப்பிட்ட சனல்4 தான் தற்போது ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள சனல் 4 விவகாரம்: போலிச் செய்தி என அறிவிப்பு

இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள சனல் 4 விவகாரம்: போலிச் செய்தி என அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

சனல் 4 விவகாரம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல்4  ஊடகம் 15 நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த காணொளி தற்போது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

சிங்கள அரச தலைவரை உருவாக்க 9 முஸ்லிம்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா..! நாடாளுமன்றத்தில் கேள்வி | Channel4 Telecast Shocking Details Easter Attacks

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவர் ஒருவரை உருவாக்குவதற்காக இந்த குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பின்னணியில் தான் சனல்4 இவ்வாறான காணொளிகளை வெளியிடுகிறது.

வெள்ளைக் கொடி ஏந்தி வந்த அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என குறிப்பிட்ட  சனல்4  தான் தற்போது ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.

சனல்4 விற்கு முறைப்பாடு அல்லது தகவல்களை வழங்கியுள்ள அன்ஷிப் அசாத் மௌலானா என்ற நபர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஊடாக, ஊடக செயலாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நபர் சுவிட்சர்லாந்து நாட்டில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளார்.

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேவை உடன் பதவி நீக்க வேண்டும்: சாணக்கியன் பகிரங்க வலியுறுத்தல்

பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேவை உடன் பதவி நீக்க வேண்டும்: சாணக்கியன் பகிரங்க வலியுறுத்தல்

அன்ஷிப் அசாத் மௌலானா என்ற இந்த நபரின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 700 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் வெற்றி

இவர் தான் தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவர் ஒருவரை உருவாக்க ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக குறிப்பிடுகிறார். இவருக்கு எதிராக பொலிஸில் நிதி மோசடி உள்ளிட்ட பல முறைப்பாடுகள் உள்ளன. இந்த குற்றச்சாட்டுக்கள் முறையற்றது.

சிங்கள அரச தலைவரை உருவாக்க 9 முஸ்லிம்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா..! நாடாளுமன்றத்தில் கேள்வி | Channel4 Telecast Shocking Details Easter Attacks

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் 2019ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஆனால் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை முன்னிலைப்படுத்தி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றது.

ஏப்ரல் குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் ராஜபக்சர்கள் மக்களாணையை பெற்றுக்கொண்டுள்ளார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அப்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், புலனாய்வு பிரிவினர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளன.

மக்களாணையை வெல்ல குண்டுத்தாக்குதலை நடத்த வேண்டிய தேவை ராஜபக்சர்களுக்கு இல்லை. சனல் 4 குறுகிய அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.

தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை தோற்றுவிக்க 09 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுத்தாரிகளாக மாறுவார்களா?   கோட்டாபய ராஜபக்ச இரண்டு வருடகாலம் ஜனாதிபதியாக பதவி வகித்தார். பல்வேறு காரணிகளால் அவர் பதவி விலகினார். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக்க செயற்பட்டவர்கள் தாம் இறக்கும் தருணத்தில் அதற்காக வேதனையடைவார்கள்.

சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)

சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)

நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர்களில் ஊழலற்ற அரச தலைவராகவே கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டார். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அடிப்படைவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து அவரை பதவி விலக்கினார்கள்.

பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்தால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என குறிப்பிட்டார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US