ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

United Nations Sri Lanka Easter Attack Sri Lanka
By Mayuri Sep 22, 2023 09:00 PM GMT
Report

ஜெனிவாவில்  சனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக நேற்று (21.09.2023) காண்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது திடீரென நேரடியாக திரையில் தோன்றிய அசாத் மௌலானா, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சபையின் ஏற்பாட்டில் சனல் 4வின் ஆவணப்படம் திரையிடப்பட்ட போது திரையில் தோன்றிய அசாத் மௌலானா தாக்குதல் சம்பந்தமான பல்வேறு விடயங்களை எடுத்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos) | Channal 4 Documentary News

அத்துடன் பல முக்கிய அரசியல் படுகொலைகளுக்குப் பொறுப்பாளிகள் குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் படுகொலைகள், ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, சிவராம் மற்றும் நடேசன் படுகொலைகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் மற்றும் கார்ட்டூன் கலைஞர் பிரகோதாவின் காணாமல் போன சம்பவம் போன்றவை குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

அச்சத்திலிருப்பதாக தெரிவிக்கும் அசாத் மௌலானா

அத்துடன், MI மற்றும் TMVP இணைந்து நடத்திய பல மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் உள்ளன.

மட்டக்களப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது

மட்டக்களப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது

அவர்கள் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், என் உயிருக்கு பயந்து அவர்களிடமிருந்து என்னால் விலக முடியவில்லை.  இலங்கை அதிகாரிகள் என்னைக் கடத்திச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள் அல்லது கொலை செய்வார்கள் என்று இன்று வரை நான் அஞ்சுகிறேன்.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos) | Channal 4 Documentary News

எனது அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில், சனல் ஃபோரின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டவுடன் பொலிஸார் எனது தாயையும் எனது சகோதரியையும் சந்தித்தனர். மேலும் எனது தொலைபேசி எண்ணையும் எனது முகவரியையும் கண்டறியும் முயற்சியில் இரண்டு தெரியாத நபர்கள் எனது சகோதரியின் மகனை விசாரணை செய்தனர்.

செப்டெம்பர் 5ஆம் திகதி பிரிட்டிஷ் சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்” என்ற ஆவணப்படம் இலங்கையில் கணிசமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன, மேலும் ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சில ஆதரவை உருவாக்கியுள்ளது, நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்...!! (Video)

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்...!! (Video)

மேலும் எனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எனது அறிவின் காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் நான் கடுமையாக அச்சுறுத்தப்பட்டேன். நான் எனது உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கோரி ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றேன்.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos) | Channal 4 Documentary News

இலங்கையில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள் மற்றும் கடத்தல்களுக்குத் திட்டமிடப்பட்டதற்கு சாட்சியாக, இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அதிகாரிகளுக்கு உண்மையை வெளிப்படுத்துவதில் ஆர்வம் இருப்பதாக நான் நம்பவில்லை. எனவே சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என தெரிவித்துள்ளார். 

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு: விலை குறித்து வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு: விலை குறித்து வெளியான அறிவிப்பு

முதலாம் இணைப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் நேற்றைய தினம் (21.09.2023) இந்த ஆவணப்படம் ஒளிபரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிபுணர்கள் மத்தியில் இந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளையும் கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்ததாக தெரியவருகிறது.

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

திரையில் தோன்றிய அசாத் மௌலானா

இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்களும், கேள்விகளும் சனல் 4 இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளன.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos) | Channal 4 Documentary News

இந்த சந்தர்ப்பத்தில் அசாத் மெளலானா திடீரென திரையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்ததாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

இதேவேளை ஐ. நாவின் விசாரணை அறிக்கையில் பத்து பேரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான குழுவில் உள்ளவர்களும் இந்த படத்தை ஐ.நாவில் பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜெனீவாவில் ஐ.நாவின் 56ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இந்த நிலையில் சனல் 4 வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் அடங்கிய காணொளியானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.   

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US