ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos)

United Nations Sri Lanka Easter Attack Sri Lanka
By Mayuri Sep 22, 2023 09:00 PM GMT
Report

ஜெனிவாவில்  சனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக நேற்று (21.09.2023) காண்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது திடீரென நேரடியாக திரையில் தோன்றிய அசாத் மௌலானா, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சபையின் ஏற்பாட்டில் சனல் 4வின் ஆவணப்படம் திரையிடப்பட்ட போது திரையில் தோன்றிய அசாத் மௌலானா தாக்குதல் சம்பந்தமான பல்வேறு விடயங்களை எடுத்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய உங்களால் இதை செய்திருக்க முடியாதா..! நாடாளுமன்றில் அனல் பறந்த கருத்து மோதல்

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos) | Channal 4 Documentary News

அத்துடன் பல முக்கிய அரசியல் படுகொலைகளுக்குப் பொறுப்பாளிகள் குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் படுகொலைகள், ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, சிவராம் மற்றும் நடேசன் படுகொலைகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் மற்றும் கார்ட்டூன் கலைஞர் பிரகோதாவின் காணாமல் போன சம்பவம் போன்றவை குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

அச்சத்திலிருப்பதாக தெரிவிக்கும் அசாத் மௌலானா

அத்துடன், MI மற்றும் TMVP இணைந்து நடத்திய பல மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் உள்ளன.

மட்டக்களப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது

மட்டக்களப்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது

அவர்கள் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், என் உயிருக்கு பயந்து அவர்களிடமிருந்து என்னால் விலக முடியவில்லை.  இலங்கை அதிகாரிகள் என்னைக் கடத்திச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள் அல்லது கொலை செய்வார்கள் என்று இன்று வரை நான் அஞ்சுகிறேன்.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos) | Channal 4 Documentary News

எனது அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில், சனல் ஃபோரின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டவுடன் பொலிஸார் எனது தாயையும் எனது சகோதரியையும் சந்தித்தனர். மேலும் எனது தொலைபேசி எண்ணையும் எனது முகவரியையும் கண்டறியும் முயற்சியில் இரண்டு தெரியாத நபர்கள் எனது சகோதரியின் மகனை விசாரணை செய்தனர்.

செப்டெம்பர் 5ஆம் திகதி பிரிட்டிஷ் சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்” என்ற ஆவணப்படம் இலங்கையில் கணிசமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன, மேலும் ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சில ஆதரவை உருவாக்கியுள்ளது, நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்...!! (Video)

தனித்தீவில் பொட்டம்மானை சந்தித்த நபரை இயக்குவது யார்...!! (Video)

மேலும் எனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எனது அறிவின் காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் நான் கடுமையாக அச்சுறுத்தப்பட்டேன். நான் எனது உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கோரி ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றேன்.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos) | Channal 4 Documentary News

இலங்கையில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள் மற்றும் கடத்தல்களுக்குத் திட்டமிடப்பட்டதற்கு சாட்சியாக, இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அதிகாரிகளுக்கு உண்மையை வெளிப்படுத்துவதில் ஆர்வம் இருப்பதாக நான் நம்பவில்லை. எனவே சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என தெரிவித்துள்ளார். 

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு: விலை குறித்து வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு: விலை குறித்து வெளியான அறிவிப்பு

முதலாம் இணைப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் நேற்றைய தினம் (21.09.2023) இந்த ஆவணப்படம் ஒளிபரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிபுணர்கள் மத்தியில் இந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளையும் கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்ததாக தெரியவருகிறது.

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

திரையில் தோன்றிய அசாத் மௌலானா

இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்களும், கேள்விகளும் சனல் 4 இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளன.

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா (Photos) | Channal 4 Documentary News

இந்த சந்தர்ப்பத்தில் அசாத் மெளலானா திடீரென திரையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்ததாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

இதேவேளை ஐ. நாவின் விசாரணை அறிக்கையில் பத்து பேரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான குழுவில் உள்ளவர்களும் இந்த படத்தை ஐ.நாவில் பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஜெனீவாவில் ஐ.நாவின் 56ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இந்த நிலையில் சனல் 4 வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் அடங்கிய காணொளியானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.   

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US