இலங்கையின் நீதி அமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் தாமதங்களைக் குறைப்பதற்காகவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் ஒரு சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முயற்சி தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதையும் குற்றவியல் வழக்குகளை விரைவாகக் கையாள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேவையான திருத்தங்கள்
இந்த நடவடிக்கைக்கு அவசியமான சட்ட கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்களையும் இந்தக் குழு பரிந்துரைக்க உள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையில் ஒரு சுயாதீன வழக்கறிஞர் அதிகாரசபையை அவசரமாக நிறுவ வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam