யாழில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஆயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களின் 3 ஆயிரம் ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இன்றைய தினம் ஒரு பவுண் தங்கம் (22 கரட்) ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக பதிவாகியிருந்தது. 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தங்க இறக்குமதியும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்மைய நாட்களாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
