அடுத்த மாதம் அரசாங்க உயர் பதவியில் மாற்றம் வருகிறதா?
அரசாங்கத்தின் உயர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் என்பதை குறிப்பிட்டு இரு பெயர்களை உள்ளடக்கிய தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தவோ, ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பிலோ எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்.