போர் பதற்றம் காரணமாக ஆட்டம்காணும் தங்கத்தின் விலை! இன்று ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (08) அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை
அதன்படி, சந்தைத் தரவுகளின்படி, தங்கத்தின் விலை 2.3% அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,811.66 அமெரிக்க டொலர் என்ற சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையில், மற்ற உலோகங்களில், வெள்ளியின் விலை 4.3% அதிகரித்து 76.08 டாலராக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பிளாட்டினம் மற்றும் பல்லேடியம் ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.
இலங்கையில் தங்கம் விலை
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் (08) தங்கத்தின் விலையில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 405,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 372,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan