பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம்!
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக சனத் பூஜித (Sanath Pujitha) கடமையாற்றி வருகின்றார். சனத் பூஜிதவை பதவியிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில காலமாகவே பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் கல்வி அமைச்சிற்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் மாற்றம் செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.