ஐக்கிய தேசியக் கட்சியின் பதவி நிலைகளில் மாற்றம்! ரணில் எடுத்துள்ள நடவடிக்கை
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று முற்பகல் கூடிய நிலையில், கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்த ரங்கே பண்டாரவும், உப தலைவராக அகில விராஜ் கரியவாசமும் நியமிக்கப்பட்டனர்.
ருவான் விஜேவர்தன தொடர்ந்து துணைத் தலைவராக செயல்படுவார். தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கட்சியின் சிரேஷ்ட துணை தவிசாளர்ளாக டி.எம். சுவாமிநாதன் மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்சியின் தலைமை பதவியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து கட்சியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam