சந்திராயனுக்கு நிலவில் கிடைத்துள்ள புதிய தொடர்பு: இஸ்ரோ மற்றுமொரு சாதனை
சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சந்திராயன் 3 நிலவில் தென் துருவத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அத்துடன், சந்திராயன் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவு தொடர்பான புதிய படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப் படங்கள் மூலமாக தரையிறக்கும் சரியான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்ய பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்திரயான் 2 ஆர்பிட்டர்
சந்திராயன் 2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திராயன் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள சந்திராயன் 2 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
எனினும், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திராயன் 2 வெற்றிகரமாக நுழைந்த போது திடீரென விக்ரம் லேண்டர் கருவியின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சந்திராயன் 2 லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை தோல்வி அடைந்தாலும், கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவை சுற்றி வந்தது.
குறித்த சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ இன்று (21.08.2023) தெரிவித்துள்ளது.
தகவல் தொடர்பு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோவால், ஜூலை 14 ஆம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் அனுப்பபட்ட சந்திராயன் - 3 விண்கலம் நாளை மறுதினம் ( 23.08.2023) மாலை 6:04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சந்திராயன் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தகவல் தொடர்பு ஏற்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இஸ்ரோ மேலும் கூறியிருப்பதாவது, ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திராயன் 2 ஆர்பிட்டருடன் சந்திரயான் 3 லேண்டர் தகவல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டது.
விக்ரம் லேண்டர் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் சந்திராயன் 2 ஆர்பிட்டர் மூலமாகவும் கிடைக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சந்திராயன் 3 நிலவில் தென் துருவத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.