ஜே.வி.பியினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பிக்க ரணவக்க

Anura Kumara Dissanayaka Champika Ranawaka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Sep 02, 2024 10:09 AM GMT
Report

நாட்டில் உள்ள அப்பாவி மக்களின் பிள்ளைகள் இலவசமாக உயர்கல்வி பெறும் அரச பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை செயற்பாடுகளை கொண்டு வந்து பெற்றோர்களையும் பிள்ளைகளையும் பயமுறுத்துபவர்கள் ஜே.வி.பினர் என பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நடைபெற்ற கண்டி மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், “இன்று நீங்கள் நிற்கும் இடத்தில் இந்த சஹாஸ் தோட்டத்தை நிர்மாணித்து கண்டிக்கு வெளிச்சத்தை கொண்டு வந்தோம். போகம்பர ஏரியின் வளாகம் கட்டப்பட்டது, தலதா மாளிகை முழு அம்சங்களுடன் கூடிய அரண்மனை வளாகமாக மாற்றப்பட்டது, மின்சார வசதிகள், குழாய்கள் வசதிகள் மற்றும் கால்நடை முற்றங்கள் புதுப்பிக்கப்பட்டன.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திட்டவட்டம்

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திட்டவட்டம்

உலக வங்கியின் உதவி

கண்டி நகருக்கு அடியில் இருந்த 200 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை சீரமைக்கப்பட்டது. நாங்கள் வெளியேறிய பின்னர், 5 வருடங்களாக எஞ்சிய ஒன்றரை கிலோமீற்றரை கோட்டாபயவாலும், ரணில் விக்ரமசிங்கவாலும் முடிக்க முடியவில்லை.

ஜே.வி.பியினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பிக்க ரணவக்க | Champika Ranawaka Who Made Allegations Against Jvp

உலக வங்கியின் உதவியுடன் கண்டியை முறையான நகரமாக மாற்றுவதன் மூலம் நாட்டிலேயே மிக உயர்ந்த தரம் வாய்ந்த பல்வகை போக்குவரத்து மையத்தை உருவாக்க திட்டமிட்டோம். ஆனால் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் கண்டி மக்களுக்கு அந்த பல்வகை போக்குவரத்து நிலையம் வழங்கப்படும் என உறுதியளிக்கின்றோம்.

ரணில் விக்ரமசிங்க இதுவரை உருவாக்கிய பொருளாதாரம் வெறும் கண்மூடித்தனமானது. ஒவ்வொரு பொருளுக்கும் வரி விதிக்கப்பட்டு மக்கள் வரிச்சுமையால் நசுக்கப்படும் பொருளாதாரம் இது. ஆனால் ரணில் வரி ஏய்ப்பு செய்பவர்களை தொட்டதில்லை. ரணில் மீண்டும் வருவார் என்றால் இன்னும் 5 வருடங்கள் இதே போல் தான் மக்கள் கஷ்டப்படுவர்.

ரணில் இம்முறை தோற்கப்போவது தெரியும். எனவே சஜித் பிரேமதாசவை தோற்கடித்து பழிவாங்க வேண்டும் என்பதே அவரது ஒரே நம்பிக்கை. இன்று இந்த நாட்டில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகிய வங்கிகளில் 620 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை உள்ளது. 66,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில ஊழல்வாதிகளுக்கு கடன் கொடுத்து அந்த கடனை வசூலிக்காமல், நம் மக்களின் ரொட்டி மற்றும் பாலில் இருந்து வரியை பெற்று வங்கிகளை காப்பாற்ற போகிறார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை 

பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை எனும் துன்புறுத்தல் கலாசார செயல்முறையை கொண்டு வந்தது யார்? அநுர திஸாநாயக்கவின் அரசியல் , லால்காந்தவின் அரசியல். இன்று மூன்று வருட பட்டப்படிப்பை முடிக்க ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகிறது.

அதனால் பல பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகங்களில் சேர இடமில்லை. ஏனெனில் அவர்களால் குழந்தைகளை அரசு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியவில்லை.

ஜே.வி.பியினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள சம்பிக்க ரணவக்க | Champika Ranawaka Who Made Allegations Against Jvp

நாட்டில் இந்த தனியார் பல்கலைக்கழக அலையை உருவாக்கியது யார்? அநுர திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு . பல்கலைக்கழகங்கள் எப்போது திறக்கப்படும்? அது எப்போது மூடப்படும்? பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? அது எப்போது மூடப்படும்? என அவர்களே முடிவு செய்தனர். குழந்தைகளுக்கு கிடைத்த ஒரே விஷயம் கண்ணீர்ப்புகை. ஏனென்றால், அதனால் பாதிக்கப்பட்ட தலைமுறை நாங்கள். 

இப்போது என்ன சொல்கிறார்கள்? அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களையும் எதிர்த்தனர் என சொல்கிறார்கள். நான் சொல்கிறேன், முடிந்தால் ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் தலைவர்கள், தங்கள் பிள்ளைகள் சென்ற பல்கலைக்கழகங்களை, அரசுப் பல்கலைக் கழகத்தை காட்ட சொல்லுங்கள்.

இவர்களில் சிலரின் பிள்ளைகள் நேரடியாக தனியார் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களால் முடிந்தால், என் குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள், என் குழந்தைகள் அரசாங்கப் பள்ளிக்குச் சென்றனர் என காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஜே.வி.பியினரின் தலைவர்களிடம் நான் சவால் விடுகிறேன், உங்களால் , உங்கள் பிள்ளைகள் சென்ற பல்கலைக்கழகங்களை முடிந்தால் முன் வந்து சொல்லுங்கள்” எனவும் பாட்டலி சம்பிக்க சவால் விடுத்துள்ளார்.    

பெரும்பான்மையான மக்கள் ரணிலின் பக்கம் : அமைச்சர் பிரசன்ன

பெரும்பான்மையான மக்கள் ரணிலின் பக்கம் : அமைச்சர் பிரசன்ன

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US